
முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
அப்போ உடனே இந்த பாடலை படிங்க
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து தன்னை பாடும்படி சொல்றாரு. என்ன பாடுறதுன்னு தெரியல என்கிறாரு. உடனே முருகப்பெருமானே முதல் வரிய எடுத்து கொடுக்கிறார்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
அப்படின்னு
பாடி முடிச்சதுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் முருகப்பெருமான் இந்த பாடல் எல்லாத்துக்கும் அவரே பேரு வைக்கிறார்.

என்ன பேரு தெரியுமா?
திருப்புகழ்னு முருகப்பெருமான் பேர் வைக்கிறார். இதை பாடுனா என்ன கிடைக்கும் முருகப்பெருமான நேர்ல பாக்கலாம். அப்படி யாராவது பாத்துருக்காங்களான்னு கேட்டா பாத்துருக்காங்க. அட ஆமாங்க திருச்செந்தூர்ல வள்ளி மலை சுவாமிகள் திருப்புகழ் பாடும்போது முருகப்பெருமானே நேரில் வந்து காட்சி கொடுத்து அவர் திருப்புகழ் பாடும் அழகை ரசித்துஇருக்கிறார்.

நீங்களும் தினமும் ஒரு முறை இந்த பாடலை பாடி பாருங்க. நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கும் காட்சி கொடுத்து உங்கள் கஷ்டத்தை எல்லாம் நீக்குவார்.
வேலும் மயிலும் சேவலும் துணை!!!!